நண்பனாய்
உன்னுடன் நடக்கும் போது I Love You
என்று எங்கேயும் பார்த்தால்
தயக்கமாய் தாவும் என் கண்கள்….
Meet my friend
என்று பிறரிடம் என்னை அறிமுகம்
செய்யும் போது ஏனோ மனதுக்குள்
Objection! your honour….
Good Morning Friend என்று விரல்கள் தட்டி
SMS செய்தாலும் உள்ளே என் மனம்
இல்லையென்று தலையை ஆட்டும்….
I love you mummy என்று நீ
செல்லிடபேசியில் பேசும்போது
என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்…
நாங்கள் என்று நீ சொல்லும்போதெல்லாம் அந்த
சொல்லுக்குள் என்னை எப்போது சேர்த்துக் கொள்வாய்
என்ற கேள்வி எப்போதும் என் மனதில்….
இப்படி எனக்குள் எல்லாமே அசாதாரனமாய் ஓடிக்
கொண்டிருக்க,
நீ மட்டும் வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய்
மிகச் சாதாரனமாய்…..
நட்பு என்று எப்படி சொல்கிறாய்……
உனக்காக தான் பூக்கள் பறித்து வர செல்கிறேன்,
இதை பிரிவு என்று எப்படி சொல்கிறாய்………..
உன்னிடம் பேச தான் சொற்கள் தேடி கொண்டிருக்கிறேன்,
இதை மௌனம் என்று எப்படி சொல்கிறாய்………….
உன்னை என் மனதோடு தானே ஒட்டி வைத்து இருக்கிறேன்,
இதை வெறும் நட்பு என்று எப்படி சொல்கிறாய்…………….
ஏனடி நீ பெண் ஆனாய்...
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை அள்ளி அனைத்து முத்தம் இட்டுருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உனக்கு மிட்டாய் வாங்கி தந்து முத்தம் வாங்கி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன் பிஞ்சு கை பிடித்து நடை பழக்கி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை குளிப்பாட்டி தலை துவட்டி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உனக்கு நிலா சோறு ஊட்டி கதை சொல்லி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை தோளில் சாய்த்து தட்டி தாலாட்டு பாடி இருப்பேன்
ஏனடி நீ பெண் ஆனாய்....
|