கல்லுரி
மூன்று வருட கல்லூரி படிப்பில்
அவளை பற்றி முழுதும் படித்தேன்
அவள் கால் ஓசை கண்டறிந்தேன்
அவள் சிரிப்பின் மென்மை உணர்ந்தேன்
அவள் வெட்கத்தை ரசித்தேன்
அவள் பெயரை பல மொழிகளில் எழுதி பார்த்தேன்
அவளின் ஒன்று விட்ட மாமாவின் பெயர் அறிந்தேன்
அவள் முன் ஜென்மம் அறிய முயன்று தோற்றேன்
அவள் பிறந்த நாள் கண்டறிந்து கோவிலுக்கு சென்றேன்
அவளுக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தும் அறிந்தேன்
மூன்றாம் வருட முடிவில் அவளுக்கு திருமணம்
என்று அறிந்தேன்
அவளை கட்டாயப்படுத்தி இருப்பார்கள் என்று சமாதானம்
அடைந்தேன்
அன்று முழுவதும் அழுது அழுது கண்களை குலமாக்கினேன்
வாழ்க்கை முழுதும் அவள் நினைவோடு வாழ முடிவு செய்தேன்
திருமண பத்திரிக்கை தர என் வகுப்புக்கு வந்தாள்
சிரித்து பேசி வந்தவள் என்னை பார்த்து மௌனம் ஆனாள்
பின் புன் முறுவலோடு " உங்க பேரு ?" என்றாள்
ஏனோ செத்து போக தோன்றியது...
|